செய்திகள்

தெரு நாய்கள் கடித்ததில் 4 வயது சிறுவன் பரிதாப பலி

Published On 2017-09-22 12:44 GMT   |   Update On 2017-09-22 12:44 GMT
ஆந்திரப்பிரதேசம் மாநிலம் குண்டூரில் தெரு நாய்கள் கடித்ததில் 4 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்:

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் குண்டூரில் கூலித் தொழிலாளிகளின் நான்கு வயது மகன் மற்றும் மகள் நேற்று மாலை விளையாடுவதற்காக அருகில் உள்ள பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த தெரு நாய்கள் அந்த சிறுவன் மீது பாய்ந்து அவனை கடித்து குதறின. இதனை அருகில் இருந்தவர்கள் செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற சிறுவனின் பெற்றோர் அவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இந்த சம்பவத்திற்கு மாநகராட்சி மீது சிறுவனின் தாயார் மல்லேஷ்வரி குற்றம்சாட்டினார். தங்கள் பகுதியில் தெரு நாய்கள் அதிகம் இருப்பதாக மாநகராட்சியிடம் இதற்கு முன் புகார் அளித்ததாகவும், அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் தான் தன் மகன் இறந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து குண்டூர் மாநாகராட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என குழந்தைகள் உரிமை அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News