செய்திகள்

கொல்கத்தா துர்கா பூஜை விழாவில் பாகுபலி அரண்மனை செட்

Published On 2017-09-20 09:26 GMT   |   Update On 2017-09-20 09:26 GMT
கொல்கத்தா துர்கா பூஜை விழா பந்தலில் பாகுபலி படத்தில் இடம் பெற்ற மகிழ்மதி அரண்மனை போன்று 100 அடியில் அரண்மனை தோற்றம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தில் துர்கா பூஜை விழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடக்கும் இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

குறிப்பாக கொல்கத்தா நகரம் விழா கோலம் பூண்டிருக்கும். தனியாரால் அமைக்கப்பட்ட விழாவையொட்டி பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு கண்காட்சி நடத்தப்படுகிறது. பந்தலில் பாகுபலி படத்தில் இடம் பெற்ற மகிழ்மதி அரண்மனை போன்று 100 அடியில் அரண்மனை தோற்றம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இன்றைய அரசியல் சூழ்நிலை, பொழுது போக்கு போன்றவற்றை குறிக்கும் வகையிலும் அரங்குகள் இடம் பெற்று உள்ளன. குறிப்பாக பண மதிப்பு இழப்பால் மக்கள் பட்ட கஷ்டங்களை ஆதரிக்கும் வகையில் “பண மரம்” ஒன்று வைத்து உள்ளனர். அதில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை தொங்கவிட்டு இருக்கிறார்கள். அதே போல் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்று சிலைகள் வைத்து உள்ளனர்.

மேலும் பெண் சிசு கொலை தடுப்பு போன்ற விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News