செய்திகள்

டிராய்-யின் புதிய விதிமுறையால் செல்போன் அழைப்புக்கட்டணம் குறைய வாய்ப்பு

Published On 2017-09-19 19:32 GMT   |   Update On 2017-09-19 19:32 GMT
ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கு தொடர்பு கொள்ளும் போது நிறுவனங்கள் செலுத்த வேண்டிய இணைப்பு கட்டணம் குறைக்கக்கப்பட்டுள்ளதால் செல்போன் அழைப்புக்கட்டணங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:

ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கு தொடர்பு கொள்ளும் போது நிறுவனங்கள் செலுத்த வேண்டிய இணைப்பு கட்டணம் குறைக்கக்கப்பட்டுள்ளதால் செல்போன் அழைப்புக்கட்டணங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் போனில் ஒரு நெட்வொர்க்கின் சிம்கார்டில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கின் சிம்கார்டுக்கு பேசும்போது, அந்த அழைப்பை இணைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணைப்பு கட்டணம் செலுத்த வேண்டும். இதுவரை 14 காசுகளாக இருந்த இக்கட்டணம், 6 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ இதை அறிவித்துள்ளது. இந்த கட்டண குறைப்பு அடுத்த மாதம் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இந்த இணைப்பு கட்டணம் முற்றிலுமாக நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராய்-யின் புதிய அறிவிப்பால் மொபைல்போன் அழைப்பு கட்டணங்களும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News