செய்திகள்

மணிப்பூரில் தீவிரவாத அமைப்புகளிடையே கோஷ்டி மோதல்: 3 பேர் சுட்டுக்கொலை

Published On 2017-09-17 08:41 GMT   |   Update On 2017-09-17 08:41 GMT
மணிப்பூர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கத்தின் இரு பிரிவினிரிடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இம்பால்:

மணிப்பூர் மாநிலத்தில் ஐக்கிய பழங்குடியினர் விடுதலை ராணுவம் என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் பிளவு ஏற்பட்டு இரு பிரிவாக செயல்பட்டு வருகிறார்கள். 

இந்நிலையில், அவர்களுக்கு இடையே ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது, இரு தரப்பினரும்  துப்பாக்கியால் சுட்டு மோதிக் கொண்டனர்.

அப்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News