செய்திகள்

உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 பேர் பலி

Published On 2017-08-26 23:49 GMT   |   Update On 2017-08-26 23:49 GMT
உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பாண்டா:

உத்தரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் உள்ள சம்சுதின்பூர் கிராமத்தை சேர்ந்த சுனில் யாதவ் (வயது 28) நேற்று முன்தினம் அதே பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் பலியானார்.

இதேபோல், அதே பகுதியை சேர்ந்த மேலும் 2 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மின்னல் தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
Tags:    

Similar News