செய்திகள்

காஷ்மீர்: குரேஸ் பகுதியில் ஊடுருவிய 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2017-07-27 08:35 GMT   |   Update On 2017-07-27 08:35 GMT
காஷ்மீரின் குரேஸ் பகுதியில் அத்துமீறி நிழைய முயன்ற தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்:

காஷ்மீரின் குரேஸ் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இன்று அத்துமீறி நுழைய முயற்சி செய்துள்ளனர். இந்திய வீரர்கள் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும், மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீநகரில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து அப்பகுதியில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினரும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மச்சில் செக்டாரில் ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்தது. அப்போது ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். 
முன்னதாக 19-ம் தேதி நவ்காம் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News