செய்திகள்

ஜி.எஸ்.டி. வரியால் ரெயிலில் ‘ஏ.சி.’ வகுப்பு கட்டணம் உயருகிறது

Published On 2017-06-22 05:16 GMT   |   Update On 2017-06-22 05:16 GMT
ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வருவதால் ரெயிலில் ஏசி மற்றும் முதல் வகுப்புகளுக்கான கட்டணம் உயருகிறது.
புதுடெல்லி:

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் கீழ் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமும் பயன்படுத்தும் வீட்டு உபயோக பொருட்களுக்கு குறைந்தபட்ச வரியும், ஆடம்பர பொருட்களுக்கு அதிகபட்ச வரியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வருவதால் ரெயிலில் ஏசி மற்றும் முதல் வகுப்புகளுக்கான கட்டணம் உயருகிறது.

ரெயில்களில் ஏசி மற்றும் முதல் வகுப்புகளுக்கு மட்டுமே ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏ.சி. மற்றும் முதல் வகுப்பு டிக்கெட் கட்டணங்கள் மீது தற்போது சேவை வரி ரூ.4.5 சதவீதம் விதிக்கப்படுகிறது. இனி அந்த வரி ரத்து செய்யப்பட்டு ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதம் விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஏ.சி. மற்றும் உயர் வகுப்புகளுக்கான கட்டணங்கள் 0.5 சதவீதம் உயரும்.
Tags:    

Similar News