செய்திகள்

சந்திரபாபு நாயுடுவுக்கு ஜனாதிபதியாகும் தகுதி உள்ளது: தெலுங்கு தேசம் எம்.பி பேட்டி

Published On 2017-06-12 05:59 GMT   |   Update On 2017-06-12 05:59 GMT
ஜனாதிபதி ஆவதற்கான அனைத்து தகுதிகளும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு இருப்பதாக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

திருமலை:

ஜனாதிபதி ஆவதற்கான அனைத்து தகுதிகளும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு இருப்பதாக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

திருப்பதி கோவிலுக்கு தெலுங்கு தேச வெங்கடேஷ் எம்.பி. நேற்று சாமி தரிசனத்துக்கு வந்தார். தரிசனம் முடித்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொழில் துறை அபிவிருத்தியில் ஆந்திர மாநிலம் விரைவில் இந்தியாவின் முதல் மாநிலமாக மாற்றம் அடையும். அதற்கான அனைத்து முயற்சிகளிலும் சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று கொள்வதற்கான அனைத்து தகுதிகளும் சந்திரபாபு நாயுடுவிடம் இருக்கிறது. மாநில ஆட்சி அதிகாரத்தை மகன் அமைச்சர் லோகேஷிடம் ஒப்படைத்து விட்டு சந்திரபாபு நாயுடு நாட்டின் ஜனாதிபதி ஆக வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

சந்திரபாபு நாயுடு ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் பல வரலாறுகளை ஏற்படுத்துவார் என்றார்.

Tags:    

Similar News