செய்திகள்

தலைக்கு ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டவர் உள்பட போலீஸ் தேடிய 3 மாவோயிஸ்டுகள் ஒடிசாவில் சரண்

Published On 2017-05-29 20:58 GMT   |   Update On 2017-05-29 20:58 GMT
ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலா போலீஸ் நிலையத்தில் மாவோயிஸ்டுகளான லோகர், புலா முண்டா மற்றும் ஒரு சிறுவன் ஆகிய மூவரும் நேற்று காலை சரண் அடைந்தனர்.
ரூர்கேலா:

ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் கேலோ, ஜாம்தார், கொலிஜார் மற்றும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகளான சித்தார்த் லோகர்(வயது 28), புலா முண்டா(19) மற்றும் ஒரு சிறுவனை ஒடிசா போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இவர்களில் லோகரின் தலைக்கு ரூ.5 லட்சமும், புலா முண்டாவின் தலைக்கு ரூ.1 லட்சமும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலா போலீஸ் நிலையத்தில் மாவோயிஸ்டுகளான லோகர், புலா முண்டா மற்றும் ஒரு சிறுவன் ஆகிய மூவரும் நேற்று காலை சரண் அடைந்தனர். இவர்கள் 3 பேரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கடந்த 20-ந்தேதி லோகரும், முண்டாவும் ஒடிசாவின் மகுல்படா என்னும் இடத்தில் பதுங்கி இருந்தபோது, போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டவர்கள் ஆவர். அதைத் தொடர்ந்து இவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News