செய்திகள்
கிருஷ்ணா நதிநீர் இணைப்பு பணிகள் விரைவில் நிறைவடையும்: சந்திரபாபு நாயுடு தகவல்
சித்தூர் மாவட்டத்தில் நடந்து வரும் கிருஷ்ணா நதிநீர் இணைப்பு பணிகள் விரைவில் நிறைவடையும் என்று ஆந்திர முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
திருமலை:
சந்திரபாபு நாயுடு நேற்று தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டு மக்கள் அனைவரும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் இருக்க வேண்டியும், நாட்டில் மழை பொழிந்து விவசாயிகள் கவலை இல்லாமல் வாழ வேண்டும் என்றும் ஏழுமலையானை தரிசனம் செய்து வேண்டி கொண்டேன். ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வேன்.
சித்தூர் மாவட்டத்தில் நடந்து வரும் கிருஷ்ணா நதிநீர் இணைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
திருப்பதி, சித்தூர் பகுதிகளில் பல தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பதியின் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் வகுக்கப்படும். மேலும் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திற்கு புதிய அறங்காவலர் குழு அமைக்கப்படும்.
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தை முதன்மையான மாநிலமாக்க பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சந்திரபாபு நாயுடு நேற்று தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டு மக்கள் அனைவரும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் இருக்க வேண்டியும், நாட்டில் மழை பொழிந்து விவசாயிகள் கவலை இல்லாமல் வாழ வேண்டும் என்றும் ஏழுமலையானை தரிசனம் செய்து வேண்டி கொண்டேன். ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வேன்.
சித்தூர் மாவட்டத்தில் நடந்து வரும் கிருஷ்ணா நதிநீர் இணைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
திருப்பதி, சித்தூர் பகுதிகளில் பல தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பதியின் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் வகுக்கப்படும். மேலும் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திற்கு புதிய அறங்காவலர் குழு அமைக்கப்படும்.
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தை முதன்மையான மாநிலமாக்க பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.