செய்திகள்

ரிப்பேரான காருக்குள் விளையாடியபோது விபரீதம்: லாக் ஆனதால் 2 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு

Published On 2017-04-22 10:14 GMT   |   Update On 2017-04-22 10:14 GMT
உ.பி.யில் ரிப்பேரான காருக்குள் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது கதவு லாக் ஆனதால், 2 குழந்தைகள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
மொரதாபாத்:

உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் இன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ரிப்பேரான கார் ஒன்றில் ஏறி அமர்ந்து விளையாடியுள்ளனர். சிறிது நேரத்தில் காரின் கதவு தானாக லாக் ஆகிவிட்டது. குழந்தைகளால் திறக்க முடியவில்லை.

அனைத்து கண்ணாடிகளும் மூடப்பட்டிருந்ததால் குழந்தைகள் மூச்சுத்திணறி உயிருக்குப் போராடினர். குழந்தைகள் உள்ளே துடிப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், கார் கதவினை திறந்து குழந்தைகளை மீட்டனர். அதற்குள் இரண்டு குழந்தைகள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.



ஒரு குழந்தை மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News