செய்திகள்

மருத்துவ தம்பதியர் கல்லால் அடித்துக்கொலை: சத்தீஸ்கரில் பயங்கரம்

Published On 2017-04-06 10:52 GMT   |   Update On 2017-04-06 10:52 GMT
மருத்துவ தம்பதியர் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம், சத்தீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தின் கவார்தா மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ தம்பதியர் கணேஷ் சூர்யவன்ஷி- உஷா சூர்யவன்ஷி. கடந்த 3 நாட்களாக இருவரும் பணிக்கு செல்லவில்லை. சில நாட்களாக இருவரையும் வீட்டிற்கு வெளியில் பார்க்காததால் அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கும் சந்தேகம் எழுந்தது.

சந்தேகத்தைத் தொடர்ந்து, வீட்டின் கூரை வழியாக அக்கம் பக்கத்தில் உள்ளோர் அவர்களின் வீட்டினுள் எட்டிப்பார்த்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வீட்டினுள் மருத்துவர்கள் இருவரும் பிணமாகக் கிடக்க, அவர்களுக்கு அருகில் ஏராளமான கற்கள் தரையில் கிடந்தன.

இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுக்க, தகவலைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் மருத்துவர்கள் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவ தம்பதியரின் மரணம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News