செய்திகள்

ஒடிசாவில் பஸ்-டிராக்டர் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் உயிரிழப்பு

Published On 2017-04-04 16:13 GMT   |   Update On 2017-04-04 16:13 GMT
ஒடிசா மாநிலத்தில் டிராக்டரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் ராய்ரங்பூரில் இருந்து இன்று ஜசிப்பூர் நோக்கி சுமார் 15 பயணிகளுடன் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து, கேரானா மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிராக்டருடன்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு வாகனங்களும் தலைகீழாகக் கவிழ்ந்தன. பேருந்தில் இருந்த பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர்.


விபத்து பற்றிய தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Similar News