செய்திகள்

300 போலி நிறுவனங்களில் அமலாக்க அதிகாரிகள் சோதனை

Published On 2017-04-01 07:34 GMT   |   Update On 2017-04-01 07:34 GMT
சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக 300 போலி நிறுவனங்களில் சென்னை உள்பட நாடு முழுவதும் 100 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடக்கிறது. அதில் ஏராளமான அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி:

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது ரூ.3900 கோடி முறைகேடாக பணபரிமாற்றம் செய்யப்பட்டது. அதில் 300 போலி நிறுவனங்கள் ஈடுபட்டு 559 பேருக்கு உதவி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே சென்னை உள்பட நாடு முழுவதும் 100 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடக்கிறது. அதில் ஏராளமான அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

Similar News