செய்திகள்

பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கத்தியால் குத்தி கொலை செய்த மர்மநபர்

Published On 2017-03-28 10:59 GMT   |   Update On 2017-03-28 10:59 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை அடையாளம் தெரியாத மர்பநபர் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்திலுள்ள கிஷ்ணபுரா என்ற கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இனத்தவரான மட்டு ஆதிவாசி என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்றிரவு தனது இல்லத்தில் இருக்கும் போது அங்கு நுழைந்த அடையாளம் தெரியாத மர்மநபர் 4 பேரையும் கத்தியால் பயங்கரமாக குத்தியுள்ளார்.

சம்பவம் குறித்து இன்று காலை தகவலறிந்து சென்ற போலீசார் 3 பேரின் சடலங்களை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரத்தக் காயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

முன்விரோதம் காரணமாக நடைபெற்ற கொலையா அல்லது திருட்டு காரணமாக நடைபெற்ற கொலையா என இருவேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News