செய்திகள்

ஆயுதக் குறைப்பு: இந்தியா, ரஷ்யா அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Published On 2017-03-27 17:57 GMT   |   Update On 2017-03-27 17:57 GMT
ஆயுத குறைப்பு மற்றும் அணு ஆயுதப் பரவல் தடுப்பு தொடர்பான இந்தியா, ரஷ்யா அதிகாரிகள் இடையிலான ஆண்டு பேச்சுவார்த்தை தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்றது.
புதுடெல்லி:

ஆயுத குறைப்பு மற்றும் அணு ஆயுதப் பரவல் தடுப்பு தொடர்பாக இந்தியா அவ்வவ்போது பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியா, ரஷ்யா இடையிலான ஆயுத குறைப்பு மற்றும் அணு ஆயுதப் பரவல் தடுப்பு தொடர்பான ஆண்டு பேச்சுவார்த்தை தலைநகர் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. 

இந்த பேச்சுவார்த்தையில் ஆயுதங்களை குறைப்பது மட்டுமல்லாமல் தீவிரவாதம் தொடர்பாகவும் இந்த பேச்சுவார்த்தையில் ஆலோசனை செய்யப்பட்டது. 

அணுசக்தி விநியோகஸ்கர் குழுவின் இந்தியா இடம்பெறும் விவகாரத்தில் சீனாவை இணங்க வைக்க ரஷ்யா முயற்சி செய்ததாக 
தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Similar News