செய்திகள்
லாரி மீது கார் மோதி விபத்து - 8 பேர் பலி
மேற்குவங்க மாநிலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலம் புர்ட்வான் மாவட்டத்தில் இன்று அதிகாலை கால்னா என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று பனாகர் என்ற கிராமத்தின் அருகே வரும் போது எதிரே உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரியுடன் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் காரின் உள்ளே இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். இரண்டு பேர் படுகாயங்களுடன் அருகிலுள்ள புர்ட்வான் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து நிகழ்ந்த நேரம் அதிகாலை என்பதால் காரை ஓட்டிய டிரைவர் கவனக் குறைவு காரணமாக தூங்கியிருக்கலாம் என தெரிவித்துள்ள போலீசார், அடுத்த கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலம் புர்ட்வான் மாவட்டத்தில் இன்று அதிகாலை கால்னா என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று பனாகர் என்ற கிராமத்தின் அருகே வரும் போது எதிரே உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரியுடன் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் காரின் உள்ளே இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். இரண்டு பேர் படுகாயங்களுடன் அருகிலுள்ள புர்ட்வான் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து நிகழ்ந்த நேரம் அதிகாலை என்பதால் காரை ஓட்டிய டிரைவர் கவனக் குறைவு காரணமாக தூங்கியிருக்கலாம் என தெரிவித்துள்ள போலீசார், அடுத்த கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.