செய்திகள்
மாயமாகி 1 மாதத்துக்குப்பின் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சிறுமி: உ.பி-யில் பயங்கரம்
மாயமாகி சுமார் 1 மாதங்களுக்குப்பின், சிறுமி பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர் நகர்:
உத்தர பிரதேச மாநிலம் சர்தாவல் நகரத்தைச் சேர்ந்தவர் ஷமீம். இவரது மகள் குலிஸ்டா(11) கடந்த மாதம் காணாமல் போனார்.மகள் காணாமல் போனதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் குலிஸ்டாவின் பெற்றோர் அவளைத் தேடினர். எனினும் குலிஸ்டா எங்கு சென்றார் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து தனது மகள் காணாமல் போனதாக ஷமீம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஷமீம் புகாரைத் தொடர்ந்து சர்தாவல் நகர போலீசார் குலிஸ்டாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
இந்த நிலையில், காணாமல் போன குலிஸ்டா நேற்று சர்தாவல் பகுதியை சேர்ந்த குட்டையொன்றில் இருந்து பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
பாலியல் தொந்தரவு காரணமாக குலிஸ்டா கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சர்தாவல் நகரத்தைச் சேர்ந்தவர் ஷமீம். இவரது மகள் குலிஸ்டா(11) கடந்த மாதம் காணாமல் போனார்.மகள் காணாமல் போனதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் குலிஸ்டாவின் பெற்றோர் அவளைத் தேடினர். எனினும் குலிஸ்டா எங்கு சென்றார் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து தனது மகள் காணாமல் போனதாக ஷமீம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஷமீம் புகாரைத் தொடர்ந்து சர்தாவல் நகர போலீசார் குலிஸ்டாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
இந்த நிலையில், காணாமல் போன குலிஸ்டா நேற்று சர்தாவல் பகுதியை சேர்ந்த குட்டையொன்றில் இருந்து பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
பாலியல் தொந்தரவு காரணமாக குலிஸ்டா கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.