செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கி சூடு: ராணுவ வீரர் பலி

Published On 2017-03-10 03:45 GMT   |   Update On 2017-03-10 03:45 GMT
காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் உயிர் இழந்தார்.
ஜம்மு:

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் குல்பூர் எல்லைப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகளை நோக்கி நேற்று மதியம் 2 மணி அளவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், தீபக் ஜெகன்நாத் என்ற வீரர் தலையில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதற்கிடையே, பூஞ்ச் செக்டார் பகுதியில் உள்ள தராபா என்ற இடத்தில் ராணுவ வீரர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உள்ளூர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதற்கான முகாந்திரம் இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது. 

Similar News