செய்திகள்
தலைக்கு ரூ8 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்டு சரண்
சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைக்கு ரூபாய 8 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்டு இன்று சரணடைந்தார்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் சில மாவட்டங்கள் மாவோயிஸ்டு இயக்கத்தினர் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் ஒன்றாகும். மாவோயிஸ்டு இயக்கத்தினரை வேட்டையாடும் போலீசார் மீது அவர்கள் பதில் தாக்குதல் நடத்துவதும் வழக்கம். சில மாவட்டங்களில் போலீசார் மீது தாக்குதல் இங்கு மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் மனந்திருந்தி போலீசாரிடம் சரணடைவர். அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்கும்.
இந்நிலையில், மாவோயிஸ்ட் இயக்கதின் முக்கிய பெண் தலைவர் ஒருவர் போலீசார் முன்னிலையில் இன்று சரணடைந்துள்ளார். மாவோயிஸ்ட் இயக்கத்தினர் நடத்திய முக்கிய தாக்குதல்களில் இவர் அதிகம் பங்காற்றியவர். இவரை பிடித்துக் கொடுப்போருக்கு ரூபாய் 8 லட்சம் பரிசு அறிவித்து போலீசார் தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரணடைந்துள்ள பெண் மாவோயிஸ்டின் மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளை அம்மாநில அரசு வழங்கியுள்ளது.