செய்திகள்

ஒடிசா: ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறனுள்ள ஏவுகணை சோதனை வெற்றி

Published On 2017-03-01 09:11 GMT   |   Update On 2017-03-01 09:12 GMT
எதிரி நாடுகளின் ஏவுகணைகளை வழியிலேயே இடைமறித்து தாக்கும் திறனுள்ள ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது. இந்த பரிசோதனை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் இன்று நடத்தப்பட்டது.
பலாசூர்:

எதிரி நாடுகளின் ஏவுகணைகளை வழியிலேயே இடைமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணையை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். அதன் பரிசோதனை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் இன்று நடத்தப்பட்டது.

இச்சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த மாதம் (பிப்ரவரி) 11-ந்தேதி தான் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஒரு மாத இடைவெளியில் 2-வது தடவையாக இன்று மீண்டும் இது பரிசோதிக்கப்பட்டது.

Similar News