செய்திகள்

உத்தரகாண்ட்: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 8 பேர் பலி

Published On 2017-02-26 12:43 GMT   |   Update On 2017-02-26 12:43 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டோராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் பாவுரி மாவட்டத்தில் இன்று காலை கார் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாடை இழந்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த கோர விபத்தில் காரிலிருந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், பள்ளத்தாக்கில் கார் கவிழும் போது சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த வேன் மீது பயங்கரமாக மோதித் தள்ளியது. இதில், வேனிலிருந்த 6 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News