செய்திகள்
கோப்புப்படம்

விசாகப்பட்டினத்தில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

Published On 2017-02-25 10:34 GMT   |   Update On 2017-02-25 10:34 GMT
விசாகப்பட்டினம் அருகே நக்சலைட்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 2 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
விசாகப்பட்டினம்:

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த கூடம்சொந்தவீதி காட்டு பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதனால், அப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ஒரு வீட்டில் நக்சல்கள் பதுங்கியிருந்ததை கண்டறிந்த போலீசார், அவர்களை சரண் அடையும்படி எச்சரித்தனர். ஆனால் நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர்.



போலீசாரின் இத்தாக்குதலில் நக்சலைட்டுகளின் முக்கிய தலைவர் ஜாம்பிரி, கமாண்டர் சிட்டிபாபு என்கிற கிஷோர் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 2008-ம் ஆண்டு 37 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக இணைக்கப்பட்டிருந்த ஜாம்பிரி நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தார். அவரைப் பற்றி துப்பு கொடுத்தால் ரூ. 4 லட்சம் பரிசு அளிக்கப்படும் என போலீசார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், அப்பகுதியில் வேறு நக்சலைட்டுகள் பதுங்கியுள்ளனரா எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News