செய்திகள்

மம்தா பானர்ஜி போலந்து செல்கிறார்

Published On 2017-02-22 15:02 GMT   |   Update On 2017-02-22 15:02 GMT
மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி அரசு முறை பயணமாக வரும் மே மாதம் போலந்து நாட்டுக்கு செல்கிறார்.
கொல்கத்தா:

ஐரோப்பிய யூனியன் அமைப்பை சேர்ந்த போலந்து நாட்டில் உள்ள கட்டோவிஸ் நகரில் வரும் மாதம் 10,11,12 தேதிகளில் ஐரோப்பிய யூனியன் அமைப்பில் உள்ள நாடுகளின் பொருளாதார காங்கிரஸ் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வருமாறு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு போலந்து அரசு அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை ஏற்று வரும் மே மாதம் 9-ம் தேதி அவர் போலந்து நாட்டுக்கு செல்கிறார். மூன்று நாள் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கும் அவர் மே 13-ம் தேதி கொல்கத்தா திரும்புகிறார்.

மேற்கண்ட தகவலை இன்று வெளியிட்டுள்ள மேற்கு வங்காளம் மாநில அரசின் செய்திக் குறிப்பில் இந்தியாவுக்கான கனடா நாட்டின் உயர் தூதர் நதிர் பட்டேல் இன்று மரியாதை நிமித்தமாக மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசியதாகவும் தெரிவித்துள்ளது.

Similar News