செய்திகள்

மைசூர் அருகே ஜெர்மனி பெண்ணை தாக்கி கொள்ளை

Published On 2017-02-22 06:02 GMT   |   Update On 2017-02-22 06:02 GMT
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே ஜெர்மனியை நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கன்னத்தை கடித்து தாக்கி கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மைசூரு:

கர்நாடக மாநிலம் மைசூருக்கு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சுற்றுலா சென்றார்.

அங்குள்ள சாமுண்டி மலையில் இருந்து அவர் நேற்று மாலை இறங்கி வந்தார்.

அப்போது அவரை கடத்த வாலிபர் ஒருவர் ஜெர்மனி பெண்ணை மறித்தார். அவரது செல்போனை பறிக்க முயன்றபோது அவர் கடுமையாக எதிர்த்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அடையாளம் தெரியாத அந்த வாலிபர் ஜெர்மனி பெண்ணின் கன்னம், வாயை கடித்தார். அதோடு அவரை கீழே தள்ளி அவரிடம் இருந்து ரூ.2,500 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

இது தொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.

வெளிநாட்டு பெண் ஒருவர் கன்னத்தை கடித்து தாக்கி கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News