செய்திகள்

மக்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

Published On 2017-02-20 08:17 GMT   |   Update On 2017-02-20 08:17 GMT
மக்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
லக்னோ:

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் 3 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 4-வது கட்ட தேர்தல் வருகின்ற வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் ஓராய் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பிரச்சார உரையாற்றினார்.

அப்போது மோடி பேசியதாவது:-

கடந்த முறை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நான் யாத்திரை மேற்கொண்டபோது இப்பகுதிக்கு வந்தேன்.
எங்கள் கட்சியை (பிஜேபி) ஆசீர்வாதம் செய்வதற்காக மக்களாகிய நீங்கள் அதிகளவில் இங்கு வருகை புரிந்துள்ளீர்கள். அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறது? யார் அமைச்சராக பதவிக்கு வரப்போகிறார்கள்? என்பதற்காக மட்டும் இந்தத் தேர்தல் நடைபெறவில்லை. அதைவிடவும் இந்தத் தேர்தல் மிகப்பெரியது.

உத்தர பிரதேசத்தின் வளர்ச்சி கந்தல் துணி போல உள்ளது. குறிப்பாக பந்தல்கண்ட் பகுதியில் வளர்ச்சி நிலை மிக மோசமாக உள்ளது. உத்தர பிரதேசத்தில் வேறு யாராவது ஆட்சிக்கு வந்தால் உங்களை அவர்கள் அழித்து விடுவார்கள். சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி போன்ற கட்சிகள் ஒரு நாணயத்தின் பல்வேறு பக்கங்கள் போன்றவர்கள்.

மற்ற கட்சிகள் சொல்வதையோ, நாங்கள் சொல்வதையோ நீங்கள் கேட்க வேண்டாம். உங்கள் மனசாட்சிப்படி வாக்களியுங்கள்.
உத்தர பிரதேசத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பந்தல்கண்ட் பகுதிக்கு தனிக்கவனம் செலுத்தி, அப்பகுதி பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்கப்படும்.

5௦௦,1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என நான் அறிவித்த போது மாயாவதி எந்த ஒரு திட்டமிடலும் இன்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட சில தினங்களில் அவர் 1௦௦ கோடி ரூபாயை வங்கியில் செலுத்தியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தற்போது பேகன்ஜி(மாயாவதி) சமாஜ் கட்சி ஆகிவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News