செய்திகள்

தைரியம் இருந்தால் முதல்வர் வேட்பாளரை அறிவியுங்கள்: கெஜ்ரிவாலுக்கு அம்ரீந்தர் சிங் சவால்

Published On 2017-01-27 23:00 GMT   |   Update On 2017-01-27 23:07 GMT
தைரியம் இருந்தால் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரை அறிவியுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அம்ரீந்தர் சிங் கேள்வி எழுப்பினார்.
அமிர்தசரஸ்:

117 சட்டசபை தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம் - பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 

சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் அகாலி தளம் - பாஜ கூட்டணி, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில், சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனது 3 நாள் தேர்தல் பரப்புரையை நேற்று பஞ்சாப் மாநிலத்தில் தொடங்கினார். மஜிதா பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவரான அம்ரிந்தர் சிங்கை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார். 

இதனையடுத்து கூட்டத்தில் பேசிய அம்ரீந்தர் சிங் தைரியம் இருந்தால் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரை அறிவியுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கேள்வி எழுப்பினார். 

மேலும் ஆம் ஆத்மி கட்சியின் நம்பத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிய அவர் கட்சி முற்றியலும் அந்நியத் தன்மை கொண்டதாக விமர்சித்தார்.

Similar News