செய்திகள்

இந்தியா விடுதலை பெற்றதில் நேதாஜிக்கு முக்கிய பங்கு உண்டு: மோடி புகழாரம்

Published On 2017-01-23 06:59 GMT   |   Update On 2017-01-23 06:59 GMT
இந்தியா விடுதலை பெற்றதில் நேதாஜிக்கு முக்கிய பங்கு உண்டு என்று பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஆயுதம் ஏந்தி போராடி ஆங்கிலேயர்களுக்கு மிக சவாலாக திகழ்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

அவரது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளில் அவருக்கு எனது வணக்கத்தை செலுத்துகிறேன். காலனி ஆதிக்கத்துக்கு எதிரான இந்திய விடுதலைப்போரில் அவரது வீரம் முக்கிய பங்கு வகித்தது.

நேதாஜி போஸ் மிகுந்த அறிவாளி. அவர் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிடும் வாய்ப்பு நமது அரசுக்கு கிடைத்ததை பெரும் கவுரவமாக கருதுகிறேன்.

இதன் மூலம் பல்லாண்டுகளாக நிலுவையில் இருந்த பிரபல கோரிக்கை முற்றுப்பெற்றது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News