செய்திகள்

பஞ்சாப்: தாய்லாந்தைச் சேர்ந்த பெண் மானபங்கம் - போலீஸ் விசாரணை

Published On 2017-01-22 16:04 GMT   |   Update On 2017-01-22 16:04 GMT
பஞ்சாப் மாநிலத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தங்கியிருந்த விடுதி உரிமையாளர் மகனால் மானபங்கம் செய்யப்பட்டதாக போலிசில் புகாரளித்துள்ளார்.
அமிர்தசரஸ்:

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சுற்றுலா வந்தபோது ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது, விடுதி உரிமையாளரின் மகன் அப்பெண்ணை மானபங்கம் செய்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு அப்பெண் தற்போது போலீசில் புகாரளித்துள்ளார். புகாரின் மீது நடவடிக்கை எடுத்த போலீசார், அந்த விடுதி உரிமையாளரின் மகன் பிரப்ஜோத் சிங் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News