செய்திகள்

தாய் கண் முன்பு இளம்பெண்ணை மானபங்கம் செய்த இளைஞர்கள்

Published On 2017-01-21 05:33 GMT   |   Update On 2017-01-21 05:33 GMT
பெங்களூரில் ஆட்டோவில் கடத்தி சென்று தாய் கண் முன்பு இளம்பெண்ணை மானபங்கம் செய்த இளைஞர்கள் மற்றும் 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூர்:

பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். இவர், தனது 20 வயது மகளுடன் தனியாக லட்சுமிதேவி நகரில் வசித்து வருகிறார். இவருக்கு அசாமை சேர்ந்த சவுகத் என்பவர் துணையாக இருந்து வந்தார்.

தனியார் ஆஸ்பத்திரியில் அந்த பெண்ணுடன் வேலை பார்க்கும் ஒருவருடைய 15 வயது மகள் அடிக்கடி இந்த பெண்ணின் வீட்டுக்கு வருவது உண்டு. அப்போது சவுகத்தும் அந்த சிறுமியுடன் பேசி பழகினார்.

இந்த நிலையில் சவுகத்தை திடீரென காணவில்லை. அந்த சிறுமியையும் காணவில்லை. சவுகத் சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி எங்கோ அழைத்து சென்று விட்டதாக சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கருதினார்கள்.

இதற்கு ஆஸ்பத்திரி ஊழியரான அந்த பெண்ணும், அவரது மகளும்தான் காரணம் என சிறுமியின் உறவினர்கள் நினைத்தனர்.

எனவே, அவர்கள் ஆட்டோவில் அந்த பெண் வீட்டுக்கு வந்து தகராறு செய்தனர். திடீரென அந்த பெண்ணையும், மகளையும் ஆட்டோவில் கடத்தி சென்றனர்.

பழைய சென்னை சாலையில் உள்ள டின் தொழிற்சாலை அருகே வைத்து தாய் கண்முன்பே அந்த இளம்பெண்ணின் ஆடையை கிழித்து மானபங்கம் செய்தார்கள். இம்ரான் பாஷா (வயது 28), ஜபியுல்லா வாசிம் (23) ஆகியோரும் இளம்பெண்ணை மானபங்கம் செய்ததில் முக்கிய பங்கு வகித்தனர்.

இது தொடர்பாக தாய்- மகள் இருவரும் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து இம்ரான் பாஷா, ஜபியுல்லா வாசிம் மற்றும் தசீனா, யாஸ்மின், இந்திராம்மா ஆகிய 3 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காணாமல் போன சவுகத் மற்றும் சிறுமியை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

Similar News