செய்திகள்

ஊனமுற்ற பெண்ணை கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

Published On 2017-01-16 05:14 GMT   |   Update On 2017-01-16 05:14 GMT
ஓடும் ஜீப்பில் ஊனமுற்ற பெண்ணை இருமுறை கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பெங்களூர்:

கர்நாடக மாநிலம் தும்கூர் நகர போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் உமேஷ். இவர் கடந்த சனிக்கிழமை இரவு ஜீப்பில் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அந்தரசன ஹள்ளி பைபாஸ் சாலையில் பாலத்தின் அருகே ஊனமுற்ற இளம்பெண் நின்று கொண்டு இருந்தார். அந்தப் பெண்ணை நெருங்கிய சப்-இன்ஸ்பெக்டர் இரவு நேரத்தில் இங்கு ஏன் தனியாக நிற்கிறாய் என்று விசாரித்தார்.

அந்தப் பெண்ணின் முகவரியை கேட்ட சப்- இன்ஸ்பெக்டர் வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறி ஜீப்பில் ஏற்றிக் கொண்டார். வழியில் அந்தப் பெண்ணிடம் சப்-இன்ஸ்பெக்டர் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். அதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டார். என்றாலும் சப்-இன்ஸ்பெக்டர் வலுக்கட்டாயமாக ஓடும் ஜீப்பிலேயே 2 முறை பெண்ணை கற்பழித்தார்.

காமவெறியனிடம் சிக்கிய அந்தப் பெண் கூச்சல் போட்டும் தப்ப முடியவில்லை. வீட்டின் அருகே ஜிப்பை நிறுத்தி அந்தப் பெண்ணின் சகோதரரை செல்போனில் வரவழைத்து அனுப்பி வைத்தார். நடந்த சம்பவத்தை அவள் பெற்றோரிடம் கூறி அழுதார்.

மறுநாள் காலையில் பெற்றோர் இதுபற்றி தும்கூர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தனர். சூப்பிரண்டு ஈஷா பந்த் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதுடன் சப்-இன்ஸ்பெக்டர் உமேஷை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் உமேஷை கைது செய்தனர். பின்னர் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

Similar News