செய்திகள்

வயலில் வேலைப் பார்த்த 3 பெண்கள் பலி: உணவில் விஷம் கலப்பா?

Published On 2016-12-09 14:19 GMT   |   Update On 2016-12-09 14:19 GMT
வயல்வெளியில் வேலைப் பார்த்து வந்த பெண்கள் தங்களின் மதிய உணவை உட்கொண்டபோது, 3 பேர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாகோன்:

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உள்ள ஜமுனாமுக் கிராமத்தில் உள்ள ஒரு வயலில் இன்று ஐந்து பெண்கள் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் காலையில் கொண்டு வந்த உணவை ஒரு இடத்தில் வைத்திருந்தனர். மதிய நேரம் வந்ததும் அந்த உணவை எடுத்து அருந்தினர். அப்போது அவர்களுக்கு அதிக காய்ச்சல், உடல் தளர்வு மற்றும் ரத்த வாந்தி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர்கள் ஐந்து பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்கள் வைத்திருந்த உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மாவட்ட உணவு ஆய்வுக் குழுவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பெண்கள் சாப்பிட்ட உணவு மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

வயல் வெளியில் வேலைப்பார்த்த மூன்று பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News