செய்திகள்
ஜெயலலிதா உடலுக்கு மாநில முதல்வர்கள் அஞ்சலி
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே தலைவர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பொதுமக்கள் ராஜாஜி அரங்க வளாகத்திற்கு திரண்டு வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அப்போது, ஆளுமை மிக்க தலைவரை தமிழகம் இழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் இன்று பிற்பகல் சென்னை வந்து ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக புதுவை முதல்வர் நாராயணசாமியும், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் இன்று மாலை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே தலைவர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பொதுமக்கள் ராஜாஜி அரங்க வளாகத்திற்கு திரண்டு வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அப்போது, ஆளுமை மிக்க தலைவரை தமிழகம் இழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் இன்று பிற்பகல் சென்னை வந்து ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக புதுவை முதல்வர் நாராயணசாமியும், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் இன்று மாலை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.