செய்திகள்
முதல்வர் ஜெயலலிதா குணமடைய பிரணாப், ராகுல் பிரார்த்தனை
தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று ஜனாதிபதி பிராணப் முகர்ஜி டுவிட் செய்துள்ளார்.
அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவாக குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று இந்திய ஜனாதிபதி பிராணப் முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் முதல்வர் ஜெயலலிதா குணமடைய பிரார்த்தனை செய்வதாக ராகுல் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை மந்திரிகள் வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன் போன்றோரும் பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளனர்.