செய்திகள்
பஞ்சாபில் திருமண நிகழ்ச்சியில் பெண் டான்சரை சுட்டுக் கொன்ற வாலிபர்
திருமண நிகழ்ச்சி ஒன்றில் பெண் டான்சருடன் இணைந்து ஆட விடாததால், கோபத்தில் வாலிபர் ஒருவர் டான்சரை சுட்டுக் கொலை செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டம் மவுர் பகுதியில் உள்ளூர் கமிஷன் ஏஜென்ட் ஒருவரின் மகன் திருமணம் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. அப்போது திருமண நிகழ்ச்சியில் பெண் டான்சரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மணமகனின் நண்பர்கள் அதிக போதையில் இருந்துள்ளனர்.
அவர்களின் ஒருவன் போதை தலைக்கேறியதும் மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்த 22 வயதான குல்விந்தர் கவுர் உடன் இணைந்து ஆட முயற்சி செய்துள்ளார். அப்போது சிலர் மேடை ஏறக்கூடாது என்று எச்சரித்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த அந்த வாலிபர் பெண் டான்சரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
உயிருக்குப் போராடிய அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் நான்குபேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களின் ஒருவன் போதை தலைக்கேறியதும் மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்த 22 வயதான குல்விந்தர் கவுர் உடன் இணைந்து ஆட முயற்சி செய்துள்ளார். அப்போது சிலர் மேடை ஏறக்கூடாது என்று எச்சரித்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த அந்த வாலிபர் பெண் டான்சரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
உயிருக்குப் போராடிய அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் நான்குபேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.