செய்திகள்

ரூபாய் நோட்டுகள் மாற்றம்: வங்கி மேலாளர் உள்பட 4 ஊழியர்கள் பணிநீக்கம்

Published On 2016-12-03 20:00 GMT   |   Update On 2016-12-03 20:00 GMT
அங்கீகாரமற்ற முறையில் ரூபாய் நோட்டுகள் மாற்றம் செய்தது தொடர்பாக வங்கி மேலாளர் உள்பட 4 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்
சண்டிகார்:

மத்திய அரசு 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பின்னர் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள சில கட்டுப்பாடுகளும் விதித்தது. ஆனால் சில இடங்களில் வங்கி ஊழியர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் செல்லாத நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதாக புகார்கள் வருகின்றன.

அரியானா மாநிலம் சண்டிகாரில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கி கிளையில் மேலாளர் உள்பட 4 ஊழியர்கள் ஒருவருக்கு இதுபோல ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுபற்றி விசாரித்த வங்கி நிர்வாகம், உண்மை என நிரூபணமானதால் 4 பேரையும் பணிநீக்கம் செய்தது.

அதேபோல பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ஒரு பொதுத்துறை வங்கியில் பழைய நோட்டுகளை மாற்றிக்கொடுத்ததாக வங்கி மேலாளர், காசாளர் ஆகியோரை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். 

Similar News