செய்திகள்
ஏழை எளிய மக்களுக்கு இலவச ஆன்மிக சுற்றுலா: ஆந்திர அரசு ஏற்பாடு
ஆந்திராவில் ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பில் ஆன்மிக தலங்களுக்கு செல்வதற்கு இலவசமாக சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திராவில் ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பில் ஆன்மிக தலங்களுக்கு செல்வதற்கு இலவசமாக சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆந்திர அரசு ‘திவ்ய தரிசனம்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 200 ஏழை எளிய மக்கள் தேர்தெடுக்கப்பட்டு பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு இலவசமாக அரசு பஸ்களில் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் நபருக்கு தங்கும் இடம், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இதுதொடர்பாக ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன், அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பில் ஆன்மிக தலங்களுக்கு செல்வதற்கு இலவசமாக சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆந்திர அரசு ‘திவ்ய தரிசனம்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 200 ஏழை எளிய மக்கள் தேர்தெடுக்கப்பட்டு பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு இலவசமாக அரசு பஸ்களில் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் நபருக்கு தங்கும் இடம், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இதுதொடர்பாக ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன், அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.