செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் படுகாயம்

Published On 2016-12-02 08:09 GMT   |   Update On 2016-12-02 09:16 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று பாகிஸ்தான் படைகள் நடத்திய ஆவேச துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் படுகாயமடைந்தார்.
ஸ்ரீநகர்:

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பிம்பர் காலி எல்லைக்காவல் முகாமின்மீது இன்று காலை சுமார் பத்து மணியளவில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறலாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்திய எல்லை பாதுக்காப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர்.

இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவீரர் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டை கடந்து பாகிஸ்தான் மண்ணுக்குள் இந்திய படையினர் சமீபத்தில் நடத்திய ஆவேச தாக்குதல் அந்நாட்டு ராணுவத்தை ஆத்திரமூட்டியது. அதன்பிறகு பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து நடத்திவரும் ஆவேச தாக்குதல்களில் 12 பொதுமக்கள் உள்பட 26 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த மாதம் 23-ம் தேதி இங்குள்ள நவ்ஷேரா, மாஞ்சாகோட், பாலகோட், மெந்தர் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை 10 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News