செய்திகள்

ராஜஸ்தானில் மின்சாரம் தாக்கி 5 தொழிலாளர்கள் பலி

Published On 2016-10-29 10:57 GMT   |   Update On 2016-10-29 10:57 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் உயர் மின் அழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில், 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில், மின்சாரம் தாக்கி 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வைஷாலி நகரி உதவி போலீஸ் கமிஷனர் லகான் சிங் கூறுகையில்:-

தனியார் பண்ணை வீடு ஒன்றில் நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் தொழிலாளர்கள் பொருட்களை மாற்றி வைக்கும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புகைபோக்கி ஒன்றினை எடுத்து சென்ற போது அது உயர் மின் அழுத்த கம்பியில் மோதியது. 11 ஆயிரம் கிலோவாட் அளவிலான மின்சாரம் அவர்கள் மீது பாய்ந்தது. இதனால் தொழிலாளர்கள் 5 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News