செய்திகள்
காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் தீவிரவாதி கொல்லப்பட்டான்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட லோலாப் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அங்கு மறைந்திருந்த ஒரு தீவிரவாதி பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்களும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான்.
தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேடை நடைபெற்று வருவதாக ஸ்ரீநகரில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட லோலாப் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அங்கு மறைந்திருந்த ஒரு தீவிரவாதி பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்களும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான்.
தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேடை நடைபெற்று வருவதாக ஸ்ரீநகரில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.