செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா செக்டாரில் பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கிச்சூடு

Published On 2016-10-23 18:50 GMT   |   Update On 2016-10-23 18:50 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை கத்துவா மாவட்டம் ஹீராநகர் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் குர்ணம் சிங் படுகாயம் அடைந்தார். குர்ணம் சிங் காயம் அடைந்த நிலையில் அவருடன் இருந்த மற்ற வீரர்கள் ஆவேசமாக, கடுமையான பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 7 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானார்கள். ஒரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News