செய்திகள்

ஸ்பானிஷ் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: ஹோட்டல் எலக்டீரிசியனுக்கு 2 ஆண்டு சிறை

Published On 2016-10-22 00:00 GMT   |   Update On 2016-10-22 00:00 GMT
ஸ்பானிஷ் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த வழக்கில், ஹோட்டல் எலக்டீரிசியனுக்கு 2 ஆண்டு சிறை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஜோத்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற அதிதி தேனோபவா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஸ்பானிய நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலா பயணியாக வந்திருந்தார். அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறையில் அந்த பெண் மீது எலக்டீசியன் ஒருவர் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணைமேற்கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. சம்பவம் நடைபெற்று 41 நாட்களே ஆன நிலையில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ஸ்பானியஸ் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த குற்றத்திற்காக ஹோட்டல் எலக்டீரிசியனுக்கு 2 ஆண்டு சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

மேலும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தலைமை மெட்ரோபாலின் நீதிபதி துஷ்யந்த் உத்தவிட்டார்.

Similar News