செய்திகள்
எம்.எல்.ஏ. கண்ணில் மிளகாய்ப்பொடி தூவிய வழக்கில் பெண் கைது
முசாபர்நகர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கண்ணில் மிளகாய்ப்பொடி தூவிய வழக்கில் பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முசாபர்நகர்:
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ. கபில் தேவ் அகர்வால் கடந்த 12-ம் தேதி தனது அலுவலகத்தில் இருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று பேர் பைக்கில் வந்து கபில் தேவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். முன்னதாக மிளகாய்ப்பொடியை தூவியுள்ளனர்.
இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ. அதிர்ஷடவசமாக தப்பிவிட்டார். எனினும் மிளகாய் பொடி தாக்குதலால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ கபில் தேவ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தப்பியோடிய குற்றவாளிகள் மூவரையும் முசாபர்நகர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடைய பெண் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் முசாபர்நகர் பகுதியை சேர்ந்த விக்ராந்த், கபில், பிரதீப் ஆகிய மூவரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டதும், கைதான பெண் விக்ராந்தின் தாயார் என்பதும் தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ. கபில் தேவ் அகர்வால் கடந்த 12-ம் தேதி தனது அலுவலகத்தில் இருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று பேர் பைக்கில் வந்து கபில் தேவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். முன்னதாக மிளகாய்ப்பொடியை தூவியுள்ளனர்.
இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ. அதிர்ஷடவசமாக தப்பிவிட்டார். எனினும் மிளகாய் பொடி தாக்குதலால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ கபில் தேவ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தப்பியோடிய குற்றவாளிகள் மூவரையும் முசாபர்நகர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடைய பெண் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் முசாபர்நகர் பகுதியை சேர்ந்த விக்ராந்த், கபில், பிரதீப் ஆகிய மூவரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டதும், கைதான பெண் விக்ராந்தின் தாயார் என்பதும் தெரிய வந்துள்ளது.