செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கு: அசாம் கோர்ட்டில் 29-ந்தேதி ராகுல் காந்தி ஆஜராகிறார்

Published On 2016-09-27 03:32 GMT   |   Update On 2016-09-27 03:32 GMT
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அசாமில் உள்ள கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தது தொடர்பான விசாரணைக்கு வருகிற 29-ந்தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராகிறார்
கவுகாத்தி:

அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அசாமில் உள்ள வைஷ்ணவிதேவி கோவிலுக்கு சென்றபோது தன்னை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தடுத்து நிறுத்தியதாக குற்றம் சாட்டி இருந்தார்.

இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அசாமில் உள்ள கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த காமரூப் மாஜிஸ்திரேட்டு வருகிற 29-ந்தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இதனையடுத்து வருகிற 29-ந்தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக இருப்பதாக முன்னாள் முதல்-மந்திரி தருண் கோகாய் தெரிவித்து உள்ளார். 

Similar News