செய்திகள்

தலித்துகளைத் தாக்கக் கூடாது வேண்டுமானால் என்னைத் தாக்குங்கள்: பிரதமர் மோடி

Published On 2016-08-07 16:11 GMT   |   Update On 2016-08-07 16:11 GMT
தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துவோர் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐதராபாத்:

ஐதராபாத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி , தலித்துகளைத் தாக்குவதற்குப் பதிலாக தம்மீது தாக்குதல் நடத்தலாம் எனவும், வேண்டுமானால் தம்மை துப்பாக்கியால் கூட சுடலாம் எனவும் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

தலித் மக்களைப் புறக்கணித்தால் இந்த உலகம் நம்மை மன்னிக்காது. சமூக விரோத சக்திகளிடமிருந்து இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமை தமக்கு இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

தலித் மக்கள் மீது நாடு முழுவதும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News