செய்திகள்

ஐதராபாத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி: 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Published On 2016-07-24 15:01 GMT   |   Update On 2016-07-24 15:01 GMT
ஐதராபாத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஐதராபாத்:

ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் என்ற இடத்தில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுக்குமாடி கட்டிடம் மள மளவென இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்னும் சில பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஐதராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News