என் மலர்tooltip icon

    இந்தியா

    • 45 வயதான நிதின் நபின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
    • ஐந்து முறை எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    பாஜக-வின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா இருந்து வருகிறார். இவரது பதிவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் மாற்று தலைவர் தேர்வு செய்யப்படாமல் உள்ளது. பீகார் மாநிலத்தில் இருந்து 5 முறை எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் நபி கடந்த ஆண்டு பாஜக-வின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 19-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

    இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால், ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். இல்லை என்றால், பாஜக தலைமையகத்தில் தேர்தல் நடைபெறும்.

    நிதின் நபி (வயது 45), மறைந்த முன்னாள் பாஜக தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நபின் கிஷோர் பிரசாத் சின்ஹா மகன் ஆவார். நிதின் நபின், சித்தாந்த ரீதியாக ஆழமான வேரூன்றியவரும், அமைப்புக்கு முழுமையாக அர்ப்பணிப்பு கொண்டவருமான ஒரு ஆற்றல்மிக்க தலைவர் என்று பாஜக கருதுகிறது. மேலும், இவர் ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வந்தவர்.

    ஜே.பி. நட்டா 2019-ம் ஆண்டு பாஜக-வின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். அமித் ஷாவின் தேசிய தலைவர் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், 2020 ஜனவரியில் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    • முன்னாள் கணவர், மேரி கோம் கடந்த காலங்களில் தமக்குத் துரோகம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
    • நிதி தொடர்பான அனைத்து புகார்களும் பொய்யானவை என்றும் ஓன்லர் திட்டவட்டம்

    குத்துச்சண்டையில் ஆறுமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் இந்திய வீராங்கனை மேரி கோம். மேரி கோமிற்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் ஓன்லர் கோம். இந்த தம்பதி கடந்த 2023ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். இதனிடையே சமீபத்தில் விவாகரத்து குறித்துப் பேசியிருந்த மேரி கோம், தனது முன்னாள் கணவர் தன்னை பணரீதியாக ஏமாற்றியதாக தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் மேரி கோமின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள அவரது முன்னாள் கணவர், மேரி கோம் கடந்த காலங்களில் தமக்குத் துரோகம் செய்ததாக தெரிவித்துள்ளார். மேரி கோம் 2013-ல் ஒரு ஜூனியர் குத்துச்சண்டை வீரருடனும், 2017 முதல் வேறொருவருடனும் உறவில் இருந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும் மேரி கோமின் கோடிக்கணக்கான பணத்தையோ அல்லது சொத்துக்களையோ தான் ஏமாற்றவில்லை என்றும், அவர் சுமத்தியுள்ள நிதி தொடர்பான அனைத்து புகார்களும் பொய்யானவை என்றும் ஓன்லர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    மேலும் "நான் அவரை மன்னிக்க முடியும், ஆனால் அவர் எனக்குச் செய்ததை என்னால் மறக்க முடியாது" என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். ங்களின் நான்கு குழந்தைகளும் தற்போது விடுதியில் தங்கிப் படிப்பதாகவும், மேரி கோம் அவர்களுக்குக் கல்விக்கட்டணம் செலுத்தினாலும், அவர்களை வளர்த்ததில் தனக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அதன்படி 1520 ரூபாய், 1240 ரூபாய், 960 ரூபாய் என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • ஆர்.ஏ.சி. அல்லது பகுதி அளவு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் ஆகிய வசதி கிடையாது.

    பிரதமர் மோடி வருகிற 17-ந்தேதி படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வகை்கிறார். இந்த ரெயில் கவுகாத்தி- கொல்கத்தா இடையே இயக்கப்பட இருக்கிறது.

    ஏசி 1, ஏசி 2, ஏசி 3 வகுப்புகளை கொண்ட இந்த ரெயிலில் பயணம் செய்வதற்கான உத்தேச கட்டணத்தை ரெயில்வே அமைச்சர் கடந்த 1-ந்தேதி வெளியிட்டிருந்தார்.

    இந்த நிலையில் இந்திய ரெயில்வே, டிக்கெட் விலை குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அதன்படி 1520 ரூபாய், 1240 ரூபாய், 960 ரூபாய் என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆர்.ஏ.சி. அல்லது பகுதி அளவு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் ஆகிய வசதி கிடையாது.

    1 கி.மீ. தூரத்தில் இருந்து 400 கி.மீ. தொலைக்கு ஒரே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 கி.மீ. தூரத்திற்கு குறைவான இடத்திற்கு பயணம் செய்ய வேண்டுமென்றாலும், முழுத் தொகையை செலுத்த வேண்டும்.

    400 கி.மீ. தொலைவிற்குப் பிறகு ஒரு கி.மீ. தூரத்திற்கு 3 ரூபாய் அடிப்படையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

    தற்போதைய அறிவுறுத்தல்களின்படி பெண்கள் ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு, மூத்த குடிமக்கள் ஒதுக்கீடு மற்றும் பணி அனுமதிச் சீட்டு ஒதுக்கீடு மட்டுமே இருக்கும். வேறு எந்த இட ஒதுக்கீடும் பொருந்தாது.

    • உண்மையான வாக்காளர்களை மொத்தமாக நீக்கியுள்ளனர்.
    • அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

    இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு கோடி பேரை நீக்க பாஜக- தேர்தல் ஆணையம் கூட்டணி முடிவு செய்துள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

    மேற்கு வங்க மாநில முதல்வராக மம்தா பானர்ஜி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கையை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையருக்கு மூன்று முறை கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    ஒருதலை பட்சமாகவும், தேர்தல் பவுதி அதிகாரிகள் (EROs) அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியும், SIR நடவடிக்கையின்போது, வரைவு வாக்காளர்கள் பட்டியலில் இருந்து 54 லட்சம் பேரை நீக்கிவிட்டனர். உண்மையான வாக்காளர்களை மொத்தமாக நீக்கியுள்ளனர். அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படாததால், தங்களது பெயரை உறுதி செய்துக் கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    தேர்தல் ஆணையம் டெல்லியில் இருந்தபடியே, பாஜக-வால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி பெயர்களை நீக்கியது. இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள், SIR தரவுகளில் உள்ள பெயர்ப் பொருத்தமின்மையைக் கணக்கில் எடுத்துக்கொண்டன. திருமணத்திற்குப் பிறகு தங்கள் குடும்பப் பெயரை மாற்றிய பெண்களின் பெயர்களை அவர்கள் நீக்கிவிட்டனர்.

    பாஜக- தேர்தல் ஆணையம் கூட்டணி இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து மேலும் ஒரு கோடி வாக்காளர்கள் பெயர்களை நீக்க முடிவு செய்துள்ளது. 

    • தெருநாய்கள் கடித்தால் ஏற்படும் காயம் அல்லது இறப்புகளுக்கு, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகங்கள் மற்றும் நாய்களுக்கு உணவளிப்பவர்கள் ஆகிய இருவருமே பொறுப்பேற்க வேண்டும்
    • தெருநாய்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இருப்பதில்லை. உங்களுக்கு நாய் வேண்டுமென்றால், உரிமம் பெற்று வளர்க்கலாமே

    தெருநாய்கள் கடித்தால் ஏற்படும் காயம் அல்லது இறப்புகளுக்கு, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகங்கள் மற்றும் நாய்களுக்கு உணவளிப்பவர்கள் ஆகிய இருவருமே பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தெருநாய்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்கள், அவற்றை பொது இடங்களில் நடமாடவிட்டு மக்களை அச்சுறுத்தவோ அல்லது கடிக்கவோ விடாமல், தங்கள் வீட்டிற்கே அழைத்துச் சென்று வளர்க்க வேண்டும் என்று தெரிவித்தது.

    தெருநாய்கள் தொடர்பாக வழக்கை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும்நிலையில், விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த கருத்தை முன்வைத்துள்ளனர்.

    "குழந்தைகள் அல்லது முதியவர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு நாய்க்கடி, மரணம் அல்லது காயத்திற்கும், தகுந்த நடவடிக்கை எடுக்காததற்காக அரசாங்கம் அதிகப்படியான இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட வாய்ப்புள்ளது. அதேபோல், நாய்களுக்கு உணவளிப்பதாக சொல்பவர்களுக்கும் இதற்கான பொறுப்பையும், கடமையையும் நிர்ணயிப்போம்.

    அவர்களுக்கு உணவளிக்க வேண்டுமென்றால், உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். நாய்கள் ஏன் பொது இடங்களில் சுற்றித் திரிந்து மக்களைக் கடித்து அச்சுறுத்த வேண்டும்?" என்று நீதிபதி விக்ரம் நாத் கேள்வி எழுப்பினார். "9 வயது குழந்தையை நாய்கள் தாக்கும்போது அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? அவர்களுக்கு உணவளிக்கும் அமைப்பா? இந்தப் பிரச்சனையை நாங்கள் கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?" என்று நீதிபதி மேத்தா கேள்வி எழுப்பினார்.

    மேலும் "தெருநாய் ஒருவரைத் தாக்கும்போது அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? தெருநாய்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இருப்பதில்லை. உங்களுக்கு நாய் வேண்டுமென்றால், உரிமம் பெற்று வளர்க்கலாமே" என்றும் தெரிவித்தார்.

    தொடர்ந்து ஒரு அமைப்பிற்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், நவம்பர் 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஆதரித்துப் பேசினார். அந்த உத்தரவு சட்ட விதிகளுக்கு உட்பட்டே இருப்பதாக அவர் வாதிட்டார். ஏற்கனவே பல்வேறு கமிட்டிகளின் அறிக்கைகள் நீதிமன்றத்திடம் உள்ளதால், இது குறித்து ஆராயப் புதிய நிபுணர் குழு எதுவும் தேவையில்லை என்றும் கூறினார்.

    இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி மேத்தா, "நீதிமன்ற உத்தரவை (நவம்பர் 7 உத்தரவு) பாதுகாக்க வந்த முதல் நபர் இவர்தான்" என்று பாராட்டினார். தெருநாய்களுக்குப் பொது இடங்களிலோ அல்லது நிறுவன வளாகங்களிலோ தங்குவதற்கு எந்தச் சட்டபூர்வ உரிமையும் இல்லை என்று தத்தார் வாதிட்டார். ஒரு மனிதர் தங்க அனுமதி இல்லாத இடத்தில் விலங்குகளும் இருக்க முடியாது என்றும், நாய்களை மீண்டும் அதே இடத்திற்கு அழைத்துச் செல்வது "விலங்கு அத்துமீறல்" ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார். சாலைகளில் பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்ட உரிமை குறித்து சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

    நகர்ப்புறங்களைத் தாண்டி வனப்பகுதிகளில் உள்ள காட்டு நாய்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். லடாக்கில் சுமார் 55,000 காட்டு நாய்கள் சுற்றித் திரிவதாகவும், அவை அழியும் நிலையில் உள்ள அபூர்வ வனவிலங்குகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்தார். முறையான நடவடிக்கைகளை எடுத்தால், சில ஆண்டுகளிலேயே நாய் கடியையும் அதன் எண்ணிக்கையையும் குறைக்க முடியும் என்று அவர் கூறினார்.

    தெருநாய் பிரச்சனை இப்போது நீதிமன்ற வளாகம் வரை வந்துவிட்டதாக நீதியரசர் மேத்தா கவலை தெரிவித்தார். சமீபத்தில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரை நாய் கடித்த சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், அங்கு நாயைப் பிடிக்க வந்த நகராட்சி ஊழியர்களை "நாய் விரும்பிகள்" என்று சொல்லிக் கொள்ளும் சில வழக்கறிஞர்களே தாக்கியதை வேதனையுடன் பதிவு செய்தார்.

    விலங்கு நல அமைப்புகளின் வேண்டுகோள்: 

    ஒரு விலங்கு நல அறக்கட்டளைக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், இந்தப் பிரச்சனையை 'மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதலாக' மட்டும் பார்க்காமல், சூழலியல் சமநிலை (Ecological balance) என்ற கோணத்தில் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பாம்புக் கடியால் ஏற்படும் இறப்புகள் தொடர்பான தரவுகளைக் குறிப்பிட்ட அவர், எலிகளைக் கட்டுப்படுத்துவதிலும் சுற்றுச்சூழலைச் சமன்படுத்துவதிலும் நாய்களுக்குப் பங்கு உண்டு என்று வாதிட்டார்.

    மனிதாபிமான அணுகுமுறை:

    மூத்த வழக்கறிஞர் பிங்கி ஆனந்த், விலங்குகளைக் கருணையுடன் நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது என்பதை வலியுறுத்தினார். நாய்களைக் கொல்வது போன்ற நடவடிக்கைகளை அவர் எச்சரித்தார். போதிய எண்ணிக்கையில் ABC (விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு) மையங்கள் இல்லாதது போன்ற உள்கட்டமைப்பு குறைபாடுகளே இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று அவர் வாதிட்டார். மேலும், ஒரு இடத்திலிருந்து நாய்களை அகற்றினால், அந்த இடத்தை விட அதிக ஆக்ரோஷமான மற்ற விலங்குகள் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளும் என்றும் எச்சரித்தார்.

    உணர்ச்சிப்பூர்வமான விவாதம்:

    மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி இப்பிரச்சனையை ஒரு "உணர்ச்சிப்பூர்வமான விஷயம்" என்று விவரித்தார். அதற்கு நீதியரசர் மேத்தா, இதுவரை வெளிப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் அனைத்தும் "நாய்களுக்காக மட்டுமே" இருப்பதாகத் தெரிகிறது என்று கருத்து தெரிவித்தார். குருசாமி தனது வாதங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற விவாதங்களை முன்வைத்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் "மேல்தட்டு வர்க்கத்தினர்" என்று நீதியரசர் மேத்தா குறிப்பிட்டார்.

    நீதிபதிகளின் கண்டிப்பு:

    நீண்டகாலமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இப்பிரச்சனை பலமடங்கு பெருகிவிட்டதாக நீதியரசர் விக்ரம் நாத் குறிப்பிட்டார். எனவே, அதிகாரிகளை வேலை வாங்கவும், இதற்கான தீர்வைத் தொடங்கவும் நீதிமன்றத்தை அனுமதிக்குமாறு அனைத்து தரப்பினரிடமும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த விவாதம் ஒரு நீதிமன்ற விசாரணை போல இல்லாமல், ஒரு பொது மேடை (Public platform) விவாதம் போல மாறி வருவதாக நீதியரசர் மேத்தா அதிருப்தி தெரிவித்தார்.

    மூத்த வழக்கறிஞர் பெர்சிவல் பில்லிமோரியா வாதிடுகையில், தெருநாய்கள் குறித்த முறையான கணக்கெடுப்பு (Census) இல்லாததும், ABC (கருத்தடை) திட்டம் சரியாகச் செயல்படுத்தப்படாததுமே அடிப்படைப் பிரச்சனை என்றார். அட்டர்னி ஜெனரல் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, நாய்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவும், திட்டச் செயல்பாடுகளை ஆய்வு செய்யவும் அவர் பரிந்துரைத்தார்.

    ஆனால், இந்த வாதங்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டவை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். முறையான கணக்கெடுப்பு இல்லாதபோது, நாய்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் எப்படி உறுதியாகக் கூறப்படுகிறது? அத்தகைய வாதங்கள் "யதார்த்தத்திற்குப் புறம்பானவை" என்று நீதியரசர் மேத்தா கேள்வி எழுப்பினார்.

    ஊடகச் செய்திகளை ஆதாரமாக நம்பக்கூடாது என்று பில்லிமோரியா எச்சரித்தார். அதற்கு நீதியரசர் நாத், "அப்படியென்றால் இந்த மனுக்களையே பதிவு செய்திருக்கக் கூடாது என்று சொல்கிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு விளக்கமளித்த பில்லிமோரியா, ஊடகச் செய்திகளை மட்டுமே அதிகமாகச் சார்ந்திருப்பது ஒரு "எதிரொலி அறை" போன்ற மாயையை உருவாக்கிவிடும் என்பதே தனது கவலை என்று கூறினார்.

    நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர் வாக்குமூலம்:

    நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட காம்னா பாண்டே என்பவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாய் தன்னைத் தாக்கியதாகவும், பின்னர் அந்த நாய் நீண்டகாலமாக மக்களால் (கல்லால் அடித்தும், உதைத்தும்) துன்புறுத்தப்பட்டதை தான் அறிந்ததாகவும் கூறினார்.

    பயத்தினால் ஏற்படும் 'தற்காப்பு ஆக்ரோஷம்' (Defensive aggression) தான் நாய்கள் கடிக்க முக்கியக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார். தன்னை கடித்த நாயையே தான் தத்தெடுத்ததாகவும், அதன் பிறகு அந்த நாய் யாரையும் கடிக்கவில்லை என்றும் அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

    நாய்களைக் கூண்டில் அடைப்பதற்குப் பதிலாக, நிறுவன வளாகங்களிலேயே அவற்றுக்கான இல்லங்களை (Dog homes) அமைப்பது போன்ற ஒரு முழுமையான அணுகுமுறை தேவை என்று அவர் வலியுறுத்தினார். மற்றொரு வழக்கறிஞர், பொது இடங்களிலிருந்து நாய்களை அகற்ற வேண்டும் என்ற நவம்பர் 7-ம் தேதி உத்தரவை கிராமப்புறங்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் தொடர்ந்து வழக்கு ஜன.20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

     

     

    • மாநிலம் முழுவதும் சுமார் 37 இடங்களில் தலா 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • தங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ளாதவர்கள், சமூகத்தின் மீதான தங்கள் பொறுப்பை நிறைவேற்றவில்லை என்றுகூறலாம்.

    ஹைதராபாத்தில் 'பிரணாம்' என்ற முதியோர்களுக்கான பகல் நேர பராமரிப்பு மையங்களை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேற்று திறந்துவைத்தார். மாநிலம் முழுவதும் சுமார் 37 இடங்களில் தலா 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பகல் நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் சமூகத் தொடர்பை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த மையங்கள் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் முதியோர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகள் போன்றவை செய்து தரப்பட்டுள்ளன.

    இந்த பராமரிப்பு மையங்கள் திறப்புவிழாவில் பேசிய ரேவந்த் ரெட்டி பெற்றோரை கைவிடும், பெற்றோருக்கு நிதி உதவி செய்ய தவறும் அரசு ஊழியர்களின் சம்பளத்தின் ஒருபகுதியை பிடித்தம் செய்யும் சட்டத்தை தெலங்கானா அரசு தயாரித்து வருவதாக  தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய ரேவந்த் ரெட்டி, "எந்தவொரு ஊழியரும் தனது பெற்றோரை கவனிக்கத் தவறினால், அவரது சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை கழிக்கப்பட்டு அவரது பெற்றோரின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்படும்," என தெரிவித்தார். மேலும் தங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ளாதவர்கள், சமூகத்தின் மீதான தங்கள் பொறுப்பை நிறைவேற்றவில்லை என்று நாம் கூறலாம். தங்களின் ஊதியம் பெற்றோருக்கு உபயோகப்படாவிட்டால், நீங்கள் எப்படி இந்த சமூகத்துக்கு உபயோகப்படுவீர்கள்? எனவும் பேசியுள்ளார். 

    • மத்திய அரசின் தலையீடு மற்றும் தொழிலாளர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து இந்த வாக்குறுதி நீக்கப்பட்டுள்ளது.
    • தற்போது "30,000+ பொருட்கள் உங்கள் வீட்டு வாசலில்" என்ற புதிய டேக்லைன்களை பிளிங்கிட் பயன்படுத்துகிறது.

    சோமேட்டோவின் ஆன்லைன் மளிகை விநியோக நிறுவனமான பிளிங்கிட் '10-minute delivery' என்ற தனது வியாபார உத்தியை அதாவது தனது வாக்குறுதியை திரும்பப் பெற்றுள்ளது. செப்டோ, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட் போன்ற ஆன்லைன் மளிகை விநியோக செயலிகள், வியாபார போட்டியில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றன. அந்த வகையில் 10 நிமிடங்களில் டெலிவிரி என்ற ஒரு உத்தியை பிளிங்கிட் நிறுவனம் கையிலெடுத்தது. இந்நிலையில் அதனை இப்போது கைவிட்டுள்ளது.

    மத்திய அரசின் தலையீடு மற்றும் தொழிலாளர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து இந்த வாக்குறுதி நீக்கப்பட்டுள்ளது. 10 நிமிட டெலிவரி இலக்குகள், ஊழியர்களை ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டவும், அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதனைத்தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. பிளிங்கிட்டைத் தொடர்ந்து செப்டோ, இன்ஸ்டாமார்ட் போன்ற நிறுவனங்களும் இதுபோன்ற மாற்றங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது "30,000+ பொருட்கள் உங்கள் வீட்டு வாசலில்" என்ற புதிய டேக்லைன்களை பிளிங்கிட் பயன்படுத்துகிறது. 

    • சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது.
    • இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது, வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சி.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவுக்கு தான் சொந்தம் என அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் இன்று தெரிவித்துள்ளதும் தெரிவித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவிற்கு வழங்கப்பட்டது.

    சீனா இந்தப் பள்ளத்தாக்கில் நிரந்தர சாலைகள் மற்றும் ராணுவத் தளவாட கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சீனா பதிலளித்துள்ளது.

    சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங், "சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது. இதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

    1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படியே இப்பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டது. எனவே அது அது சட்டப்பூர்வமானது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது, வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சி" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் சீனாவின் கருத்துக்கு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திரா திவேதி, "1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தை இந்தியா சட்டவிரோதமானது எனக் கருதுகிறது.

    எனவே, ஷக்சகம் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் கவலைக்குரிய விஷயமாகும். அதை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம்" என்று கூறினார்.

    மேலும், சீனா மற்றும் பாகிஸ்தான் இணைந்து செயல்படுத்தி வரும் 'சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்' (CPEC 2.0) தொடர்பான கூட்டறிக்கையை இந்தியா ஏற்கவில்லை என்றும், இந்திய நிலப்பரப்பு வழியாக இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துவது செல்லுபடியாகாது என்றும் அவர் கூறினார்.

    எல்லையில் யதார்த்தத்தை மாற்றச் சீனா முயல்வதைத் தொடர்ந்து எதிர்ப்போம் என்றும், இந்தியாவின் பாதுகாப்பைப் பேணத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தங்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறினார். 

    • கடந்தாண்டு பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது.
    • இந்தாண்டு பிரிக்ஸ் அமைப்பின் 18 ஆவது மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது.

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுகளை உள்ளடக்கியது BRICS அமைப்பு. இதில் புதிதாக எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா இணைந்துள்ளது.

    கடந்தாண்டு பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இந்தாண்டு பிரிக்ஸ் அமைப்பின் 18 ஆவது மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், 2026ம் ஆண்டின் BRICS அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள இந்தியா, புதிய லோகோ மற்றும் பிரத்தியேக இணையதளத்தை அறிமுகம் செய்தது.

    தாமரை வடிவிலான இந்த லோகோ இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும், 2016ல் வெளியிடப்பட்ட பழைய லோகோவை போலவே புதிய லோகோ அச்சு பிசகாமல் உள்ளதாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    • ரிக்ஷா டிரைவர் சட்டை பைக்குள் இருந்து பாம்பை எடுத்ததால் பரபரப்பு.
    • போலீசார் வரவழைக்கப்பட்டு பாம்பு மீட்கப்பட்டது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் இ-ரிக்ஷா டிரைவர் ஒருவர், தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்ததால் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உத்தர பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்தவர் தீபக் (வயது 39). இவர் இ-ரிக்ஷா டிரைவர் ஆவார். இன்று காலை மதுராவில் உள்ள மருத்துவமனைக்கு வந்தார். திடீரென தனது பைக்குள் இருந்து சுமார் ஒன்றரை அடி நீளம் உள்ள பாம்பை வெளியில் எடுத்தார். அப்போது பாம்பு படம் எடுப்பதுபோல் தலையை சற்று தூக்கியது.

    இதனால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அதிர்ச்சி அளித்தனர். டாக்டர்கள் அவரிடம் பாம்பை வெளியில் விட்டுவிட்டு வரவும் எனக் கூறினர். இந்த பாம்பு தன்னை கடித்து விட்டதாகவும், விஷ முறிவு ஊசி போட வேண்டும் என்றும் டாக்டர்களிடம் அடம் பிடித்தார். இதனால் அங்கு பரபரப்பை ஏற்பட்டது.

    பின்னர் போலீசார் வரவழைக்கப்பட்டு பாம்பு மீட்கப்பட்டது. எனினும், அந்த பாம்பு தீபக்கிற்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படுவதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்தார்.

    • பாஜக மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது" என்று விஜய் சௌதாய்வாலே தெரிவித்தார்.
    • "சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது. இதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

    சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு டெல்லியில் உள்ள பாஜக தேசியத் தலைமையகத்திற்கு நேற்று வருகை தந்தனர்.

    பாஜக தலைமையகத்தில் வைத்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறையின் துணை அமைச்சர் சுன் ஹையான் தலைமையிலான குழுவினரும், பாஜக சார்பில் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் வெளியுறவுத் துறை பொறுப்பாளர் விஜய் சௌதாய்வாலே ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    "பாஜக மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது" என்று விஜய் சௌதாய்வாலே தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    2018-ல் ராகுல் காந்தி சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ரகசிய ஒப்பந்தம் செய்ததாக பாஜக குற்றம் சாட்டியிருந்தது. அதே நேரத்தில் எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்துப் பிரதமர் மௌனம் காப்பதாகக் காங்கிரஸ் விமர்சித்தது.

    இத்தகைய சூழலில், எல்லையில் 20 இந்திய வீரர்கள் சீன ராணுவத்தால் கொல்லப்பட்ட 2020 கல்வான் தாக்குதலுக்கு பிறகு பாஜக - சீன கம்யூனிஸ்ட் கட்சி இடையே நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இதனிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவுக்கு தான் சொந்தம் என அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் இன்று தெரிவித்துள்ளதும் தெரிவித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவிற்கு வழங்கப்பட்டது.

    சீனா இந்தப் பள்ளத்தாக்கில் நிரந்தர சாலைகள் மற்றும் ராணுவத் தளவாட கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது.

    இது காரகோரம் மலைத்தொடருக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. இதனால் இந்திய வெளியுறவுத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங், "சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது. இதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

    1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படியே இப்பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டது. எனவே அது அது சட்டப்பூர்வமானது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது, வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சி" என்று தெரிவித்தார். 

    நேற்று சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஜக தலைமையகம் வருகை, இன்று ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு தங்களுக்கு சொந்தம் என சீனா கூறியுள்ளது ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பிலும், சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்கள் பரவி வருகின்றன. 

    மகாராஷ்டிராவின் சரத் பாவர் தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர் சுப்ரியா ஸ்ரீநாடே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜம்மு காஷ்மீரின் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கை சீனா தனது பிராந்தியமாக அறிவித்துள்ளது.

    கடந்த சில நாட்களாக சீனா இங்கு சிபிஇசி திட்டத்தின் பெயரில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. லடாக்கிற்குப் பிறகு, சீனா எப்படி இங்கு நுழைந்தது?

    சீனா இவ்வளவு அத்துமீறல்களில் ஈடுபடுகிறதா? பாஜக தலைவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் சந்திப்பு நடத்துகிறார்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.

    • அவ்வளவு அன்பு இருந்தால், ஏன் அவற்றை உங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லக்கூடாது?
    • 9 வயதுச் சிறுவனை நாய்கள் தாக்கும்போது யார் பொறுப்பேற்க வேண்டும்?

    கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தெரு நாய்க்கடி தொடர்பான விசயங்களில் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

    நிறுவனங்கள், சாலைகளில் இருந்து தெரு நாய்களை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மாற்றக்கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

    இன்று விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.பி. அஞ்சாரியா ஆகிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன் தெரு நாய் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி விக்ரம் நாத், "கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்களுக்கு எதிரான வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தாத மாநிலங்களிடம் ஒவ்வொரு நாய்க்கடி, நாய்க்கடியால் உயிரிழப்பு அல்லது காயம் போன்றவற்றிற்காக பெரும் இழப்பீடு கேட்கப்படும். மேலும், தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்கள் மீது பொறுப்பும் கடமையும் நிர்ணயிக்கப்படும்.

    இந்த விலங்குகள் மீது உங்களுக்கு அவ்வளவு அன்பு இருந்தால், ஏன் அவற்றை உங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லக்கூடாது? இந்த நாய்கள் ஏன் தெருக்களில் சுற்றித் திரிந்து, மக்களை கடித்து பயமுறுத்த வேண்டும்?.

    இவ்வாறு நீதிபதி விக்ரம் நாத் தெரிவித்தார்.

    மற்றொரு நீதிபதி மேத்தா "9 வயதுச் சிறுவனை நாய்கள் தாக்கும்போது யார் பொறுப்பேற்க வேண்டும்? அந்த நாய்களுக்கு உணவளிக்கும் அமைப்பா? இந்தப் பிரச்சனையை நாங்கள் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?" என கேள்வி எழுப்பினார்.

    ×