உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ஆண்டிபட்டி அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது

Published On 2022-07-02 05:06 GMT   |   Update On 2022-07-02 05:06 GMT
  • 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அவருடன் பழகி கடத்தி திருமணம் செய்த வாலிபர் மீது புகார் அளிக்கப்பட்டது.
  • குழந்தை திருமணம் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்ட–மநாயக்கன்பட்டிையச் சேர்ந்த பாண்டியன் மகன் சுரேஷ் (வயது 27). இவர் தனது உறவினர் மகளான 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அவருடன் பழகி வந்துள்ளார்.

பின்னர் வீட்டுக்கு தெரியாமல் அவரை கடத்திச் சென்று திருமணம் செய்தார். திருப்பூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி இருந்த அந்த சிறுமிக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த விபரம் தற்போதுதான் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.

எனவே இது குறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சுரேஷ் மீது குழந்தை திருமணம் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News