உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

போடி அருகே சுற்றுலா சென்று வந்தவர் திடீர் சாவு

Published On 2022-06-20 04:12 GMT   |   Update On 2022-06-20 04:12 GMT
  • சிறுமலைக்கு சுற்றுலா சென்று வந்தவர் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே திருமலாபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் சசிக்குமார்(27). இவர் தனது நண்பர்களுடன் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தபின்னர் அவர்கள் மாலை வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது சசிக்குமார் முதுகு வலிப்பதாக கூறி வாந்தி எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சசிக்குமாரை போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சசிக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து போடி நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இறந்த நபருக்கு ஏற்கனவே அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது.

எனவே குளிர்ச்சியான சூழலுக்கு சென்றதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News