உள்ளூர் செய்திகள்
- போடியில் ஐ.டி.ஐ வாலிபர் நோய்கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார்
- இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகில் உள்ள மணியம்பட்டி போயர்தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ஹரிகரன் என்ற நவீன்குமார்(23). ஐ.டி.ஐ. படித்துவிட்டு வேலைக்காக முயன்று வந்தார்.
இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் குணமாகாததால் மனமுடைந்த நிலையில் இருந்தார். சம்பவத்தன்று அரளிவிதையை அரைத்துகுடித்து தற்கொலை செய்து கொண்டார். போடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.